2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையில் மாற்றம் ஏற்படும்

Editorial   / 2018 மே 26 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையில் இன்றைய தினம் முதல் மாற்றம் ஏற்படலாம் என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்த நிலைமை காரணமாக, நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, என்பதுடன், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 35 ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 13 ஆயிரத்து 199 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .