2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாவற்குழி – யாழ்ப்பாணம் ரயில் சேவை ஸ்தம்பிதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு ரயில் சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான  போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாலம் ஒன்றை புனரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையால், இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை குறித்த தண்டவாலப் போக்குவரத்து நிறுத்தப்படயிருப்பதாக அத்திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதனால்,  கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே  ரயில் சேவை இடம்பெறும். மேலும் பயணிகளின் நன்மை கருதி மாற்று சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .