2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராய்ச்சியின் விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கோட்டை பதில் நீதவான் ஜயந்த டயஸ்  நாணயக்கார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பின் பல இடங்களிலும் வைத்து 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்யப்பட்டமைத் தொடர்பில் கடந்த மாதம் 13ஆம் திகதி “நேவி சம்பத்” என அழைக்கப்படும் கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராய்ச்சி கைதுசெய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .