2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண் மருத்துவர் கொலை : 4 சந்தேக நபர்களும் சுட்டுக்கொலை

Editorial   / 2019 டிசெம்பர் 06 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கடந்த 27ஆம் திகதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில்  4 பேர் கைது செய்யப்பட்டனர். 

விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். 

அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. 

மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .