2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பணம் கொள்ளை;சந்தேகநபர்கள் தப்பி ஓட்டம்

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை, போருவதண்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நுழைந்த இனந்தெரியாத சந்தேகநபர் இருவர் நேற்று (28) துப்பாக்கியைக் காட்டி, அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேகநபர்கள், 1 இலட்சம் ரூபாய் அளவில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், ​ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .