2024 மே 08, புதன்கிழமை

பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார் சி.டி. விக்ரமரத்ன

J.A. George   / 2020 நவம்பர் 27 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமரத்ன இன்று (27) பதவியேற்றுள்ளார்.

சுமார் 19 மாதங்களாக பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அவர், பொலிஸ் தலைமையகத்தில் இன்று பதவியேற்றுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரான சந்தன விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை  அண்மையில் அனுமதி வழங்கியது.

பொலிஸ் மா அதிபராக இருந்த  பூஜித் ஜயசுந்தர உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில், விடுமுறையில் இருந்தபோதே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X