2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 3​ஆவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாகப் பிரிவில் ஓய்வுப் பெற்ற அதிகாரியான இவர், குறித்த துறையில் 30 வருடங்கள் அனுபவமிக்கவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பாடம் தொட​ர்பில் சிறப்பு பட்டதாரியுமாவார்.

அத்துடன் ஏக்கநாயக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் வீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .