Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 08, புதன்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் நாட்டுப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பிரேஸில் நாட்டுப் பிரஜை, 45 உறைகளில் கட்டப்பட்டிருந்த 500 கிராம் நிறையுடைய கொக்கைய்ன் போதைப்பொருளை விழுங்கி வைத்திருந்துள்ளாரென, எஸ்-ரே சோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், விழுங்கியிருந்த மேற்படி கொக்கைய்ன் போதைப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
57 minute ago
1 hours ago