2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதையல் தோண்டியவர்கள் கைது

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹசலக – கொலொங்கொட பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரையும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியை சுற்றிவளைத்த வேளையிலேயே, அம்மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கொலொங்கொட ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென மேலும் தெரிவித்தன​ர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .