Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 மே 25 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகள், இன்று (25) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புத்தளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மணல்குன்று, கடையார்குளம், நூர் நகர் மஸ்ஜித் வீதி மற்றும் மரிக்கார் வீதி உள்ளிட்ட சில பிரதேசங்கள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ள நீர் உட்புகுந்த வீடுகளுக்குள் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்தோடு, சில குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி, தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளுக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago