2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளது ‘

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் பாவனை நாட்டுக்குள் அதிகரித்துள்ளதாக ​பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ​போதை பாவனையே காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்தாண்டு மாத்திரம் 737 கிலோகிராம் ஹெரோய்ன், 40,000 கிலோகிராம் கஞ்சா, 1000 கிலோகிராம் கொக்கெய்ன், ஹசீஸ் எனப்படும் போதைப்பொருள் 13 கிலோகிராம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனவென பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .