2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின் மற்றும் நீர் பிரச்சினைகளுக்கு சிறப்பு சேவை

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு காலத்தில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் குறைபாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க சிறப்பு சேவையை செயல்படுத்த இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவை இந்த சேவையை இன்று (05) செயல்படுத்தவுள்ளன.

இதனுடன் தொடர்புடைய சேவைகளைப் பெற 1939, 1987 அல்லது 1910 ஆகிய இலங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியத்தர முடியும் என, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

மேலதிக தகவலுக்கு இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு 076 42 71030 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .