2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மரணதண்டனை அமுலாவது மைல்கல்லை எட்டும்’

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்  

 

பாரிய போதைப்பொருள் விநியோகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது, குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இது, மைல்கல்லை எட்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

கண்டியில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சமூகத்தில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மீறப்படும் போதே, தண்டனை தொடர்பான சட்டங்கள் வலுப்பெறுவதாகவும் இலங்கையில் மரண தண்டனை தொடர்பான விடயங்கள், தண்டனைச் சட்டக்கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளதால், அதனை அமுல்படுத்துவதில் சில நெருக்கடிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.  

பிரதானமாக, இலங்கையில் தற்போது அதிகரித்துச் செல்கின்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குற்றச்சம்பவங்களுக்குத் தீர்வு காணும் முகமாக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்ற கருத்து உருவாகியுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளிலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறை காணப்படுவதாகவும் இது, சிங்கப்பூர் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில்கூட அமுலில் உள்ளதாகவும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .