2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு யானையின் உடலம் மீட்பு

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம்  என்று சந்தேகிக்கப்படும் யானையின் உடலம் ஒன்று கருவலகஸ்வெ-பளிகம வாவி ஓரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

15 வயதான குறித்த யானை ​கடந்த பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு குறித்த யானைக்கு வனஜீவராசிகள் அதிகாரிகள் சிகிச்சையளித்துள்ள நிலையிலேயே,யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் அடிக்கடி பல யானைகள் இற்நத நிலையில் மீட்கப்படுவதாகவும், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொம்பன் யானை ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லபட்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .