2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதலாம்தரம்: ‘விண்ணப்பத் திகதி ஜூலை 10 வரை நீடிப்பு’

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பாடசாலைகளில், 2018ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி, ஜூலை 10ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், நேற்று (27) தெரிவித்தார்.  

இந்த விடயம் தொடர்பில், ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதித் தினமாக, எதிர்வரும் 30ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.  
எனினும், தபால்த் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, விண்ணப்பங்களை தபாலிலிடுதல் உள்ளிட்டவை தொடர்பில், பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.   

அந்த விவகாரம் தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் கலந்துரையாடி, 2018ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை உள்வாங்குவதற்கான திகதியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் விண்ணப்பங்களை நேரடியாக அதிபர்களிடம் கையளிக்க முடியும். கையளித்தமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் வழங்குகின்ற ஆவணத்தையும் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பதிவுத்தபால் மூலமாக இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க முடியும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .