2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஜரட்ட பல்கலைக்கழகம்: 23ஆம் திகதி பீடங்கள் திறப்பு

Editorial   / 2019 மே 18 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தர முடியும் என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பீ.ஏ.கருணாரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்கள் கருதி மதியம் 12 மணி முதல் 4 மணிக்கிடையில் விடுதிகளுக்கு வருகை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வைத்திய பீடத்தின் இறுதி வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களை திறப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .