2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஞ்சன் கத்தியைக் காட்டி மிரட்டியதாக முறைபாடு

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவே  நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வருகைத் தந்தாரென, சபாநாயகரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைபாடு செய்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அருந்திக,

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலையின் போது, சபாநாயகருக்கு இடது புறமாக நின்றுக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப் பெரும ஆகி​யோர் கத்தியைக் காட்டி சபாநாயகரிடம் வந்தால் கொல்வதாக மிரட்டினர்.

சபாநாயகருக்கு இது தொடர்பில் முறையிட்ட போது,  அவர் பொலிஸாருக்கு அறிவிப்பதாக தெரிவித்ததுடன், தானும் நாடாளுமன்றத்தில் உள்ள பொலிஸ் உதவி அத்தியட்சகர் ஒருவரிடம் இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .