Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்திய பீட மாணவ செயற்குழு ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இன்றைய தினம்(23)முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹயியன்துடுவ ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago