2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஸ்யாவிடமிருந்து மீண்டும் இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகள்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுத்தமான எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகில் அதிகமாகக் கூரைத் தகடுகளை உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், இலங்கைக்கான குறித்த கூரைத் தகடுகளை ரஸ்யாவே அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கூரைத் தகடுகள் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வொன்று கடந்த வாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் ரஸ்யாவின் பிரதி சுகாதார அமைச்சர், இலங்கையிலுள்ள ரஸ்ய தூதுவராலய அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .