2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வர்த்தமானிக்கு எதிராக ரிட் மனு ; இன்று ஆராய்வு

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானித்து, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலை அதிகாரமற்றதாகக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரியே, மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆறு உள்ளூராட்சி மன்றங்களைச்சேர்ந்த வாக்காளர் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (16) ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, இந்த மனுவுக்கு இடையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கான, அனுமதியை தருமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் மற்றும் அந்த முன்னணியின் சார்பான சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அனுமதியளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும் இன்று (16) தீர்மானிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கண்டி, ஹாலிஎல, மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரால், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதியரசர்களான எல்.டி.பீ. தெஹிதெனிய, குமுதினி விக்ரமசிங்ஹ மற்றும் சிறிலால் குணரத்ன ஆகியோர் முன்னிலையில், நேற்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய விடயங்களுக்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரைக்கு அப்பால்   அமைச்சரினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உபகுழுவின் பரிந்துரைகளை மீறி வர்த்தமானியை வெளியிடுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .