2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 164பேர் வீடுகளுக்கு

Editorial   / 2020 ஜூலை 09 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில், வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164பேர் இன்று (09) வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .     

கடந்த மாதம் 27 ஆம் திகதி அமெரிக்கா, 
பிரித்தானியா, சிங்கப்பூர், பங்களாதேஸ் போன்ற நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர்  வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.   

 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த நிலையில், இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர். 

அந்தவகையில் பெரியகட்டு முகாமிலிருந்து 92 பேரும், பம்பைமடு முகாமிலிருந்து 72 பேரும் என மொத்தம் 164 பேர் அவர்களது சொந்த இடங்களான புத்தளம், காலி,மாத்தறை, களுத்துறை போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .