2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விவாதத்தில் மஹிந்த இல்லை

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வில், விவாதம் இடம்பெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த விவாதத்தில் கலந்துகொள்ளப்​போவதில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது, வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே, இந்த விவாதத்தில் அவர் பங்கேற்கப்போவதில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .