2024 மே 08, புதன்கிழமை

வௌ்ள நீரில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் வௌ்ள நீரில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு, சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என சுகாதார மேம்பாட்டு அலுவலகம் அறிவுருத்தியுள்ளது.

வௌ்ளநீரில் மூழ்கியுள்ள பிரதேசங்களில், திடீர் விபத்துக்களும், நோய்களும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதை சுட்டிக்காட்டியே சுகாதார மேம்பாட்டு அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், இருமல் மற்றும் உடம்பில் கொப்பளங்கள் ஏற்படுதல் போன்ற நோய் அறிகுறிகள் ​காணப்பட்டால், அருகில் உள்ள அரசாங்க வைத்தி்யசாலைகளுக்கு  சென்று உடனடியாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரச்சனைகள் காணப்படும் சந்தர்ப்பத்தில், சுகாதார அமைச்சின் 0710107107 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புக்கொள்ள முடியும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X