Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ரிஷா
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர நட்புறவின் அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி, நட்புறவுப் புகைப்படக் கண்காட்சி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாட்டிய ஆளுநர், இலங்கை - சீனா இராஜதந்திர உறவுகள் பலமாக உள்ளது. யுத்த காலத்திலும் எமக்கு சீனா உதவியது. தற்போது அதிகளவான சீன முதலீடுகள், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து தற்போது வரையிலான இலங்கை - சீன இராஜ தந்திர உறவுகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட செயலகமும் சீனா நட்புறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்புகைப்படக்கண்காட்சி, திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நாளை வியாழக்கிழமையும் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார சீனா நட்புறவு சங்கத்தின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago