2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைக்குண்டு வைத்திருந்தவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 29 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மட்கோ மஹாமாயபுர பகுதியில், கைக்குண்டொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (29) காலை நபரொருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த, அலுத்கெதர பேலிகே பியங்க விஜேசேகர (34 வயது) என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை - சிறிமாபுர பகுதியில், கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், இன்று (29) குறித்த நபரின் வீட்டைச் சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தியபோதே, கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .