2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சேவையில் இனப்பாகுபாடு காட்டக்கூடாது’

அப்துல்சலாம் யாசீம்   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சேவையில் இனப்பாகுபாடு காட்டக்கூடாதெனவும் நாம் அனைவரும் நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாளராக மாற வேண்டுமெனவும், கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தில்  ஐந்து வருடங்களுக்கும் மேலாக தற்காலிகமாகக் கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு, நியமனத்தை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர்  டபிள்யூ.எச். தயாபால ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .