2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தடை செய்யப்பட்ட கூரிய வாளுடன் இளைஞன் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன்   கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் தடை செய்யப்பட்ட கூரிய வாளொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர், இன்று (23) காலை 11 மணியளவில்  கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இளைஞனை விசாரணை செய்த போது அவரிடம் மறைத்து வைக்கப்ட்டிருந்த நிலையில் கூறிய வாளொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் முகம்மது றினாஸ் (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், கைப்பற்றப்பட்ட வாளுடன், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பதுடன் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை,  கிண்ணியா சூரங்கல், சாந்தி நகர் பகுதியில் வைத்து 20 கிராம் கேரளக் கஞ்சாவுடன், 47 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .