2024 மே 11, சனிக்கிழமை

தேர்தல் முன்னெடுப்பு தொடர்பில் ஆராய்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கான முன்னெடுப்புத் தொடர்பிலான கலந்துரையாடல், கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று (29) மாலை  நடைபெற்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப்பின் விசேட வழிகாட்டுதலின் கீழ், தேர்தலுக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

மூதூர் தேர்தல் தொகுதியின் அமைவிடங்கள், வாக்காளர் விவரங்கள், என பல்வேறு விளக்கங்களை, பிரதியமைச்சர் இதன் போது முன்வைத்தார்.

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், புதிய ஜனநாயக முன்னணியின் அங்கீகாரமளிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் பிரமுகர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .