2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போதை மாத்திரைகளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 44 போதை மாத்திரைகளை வைத்திருந்த இருவரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (19) உத்தரவிட்டார்.

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக உப்புவெளி போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 44 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .