2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணிக்கூட்டுக் கோபுரம் செயிலிழப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.எல்.நௌபர், ஏ.எம்.ஏ.பரீத்  

 

திருகோணமலை, மூதூர் புளியடிச்சந்தியில்  அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம், செயலிழந்துள்ளது. இதனைப் புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் உரிய பகுதியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மூதூர் பிரதான வீதியின் நாற் சந்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில், டிஜிட்டல் முறைமூலம் இயங்கும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் தற்போது அந்த மணிக்கூடுகள் இயங்காத நிலையில் காணப்படுகின்றன.

அவ்வீதி வழியாக பயணிக்கும் பயணிகளின் நலன்கருதி, குறித்த மணிக்கூடுகளைத் திருத்துவதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .