2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூதூரில் நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் மூதூர் பிரதேசத்தில் நீர் விநியோகத்துக்குப் போதியளவு நீர் இல்லாமையால் அதிகாலை 5 மணி முதல் காலை  10 மணி   வரை மாத்திரமே நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக, மூதூர் நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நேற்று முதல் அமுலாகியுள்ள இந்த நீர் கட்டுப்பாடு, நிலமை சீராகும் வரை தொடருமெனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

எனவே, பாவனையாளர்கள் அதற்குரிய முன் ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நீர்க் கட்டுப்பாடு, தூர், தோப்பூர், ஈச்சிலம் பற்று, சேருவில ஆகிய பகுதிகளில் இவ் நீர் விநியோகம் நீர் உந்துப்பகுதிகளில் போதியளவு  நீர் கிடைக்கும் வரை அமுலாகுமென, நீர்வ ங்கல் வடிகாலமைப்பு சபையின்   அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .