2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூதூர் அரிசி ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான, மூதூர் - 58 பகுதியில்  கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையில் காணப்பட்ட அரிசி ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது  நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு,  மூதூர் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபை உறுப்பினர்கள், இதனை தற்காலிகமாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச் சங்கத்தின் உறுப்பினர்களான நவநாதன் (அதிபர்), கருணை நாதன தற்காலிகமாக இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

எனவே  நெல்லை சுத்திகரிக்க, நெல்லை அரிசியாக்க தேவை உள்ளவர்கள், 0778714652, 0775943209,  0775291818 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .