2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானைகளால் நான்கு வீடுகள் சேதம்

தீஷான் அஹமட்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முன்னம்போடி வெட்டை, சிராஜ் நகர் கிராமங்களுக்குள் நேற்று (14) இரவு உட்புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளைச்  சேதப்படுத்தியுள்ளன.

அத்தோடு, அரிசி மூடைகளையும் வெளியில் வீசி, வீட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளன.

காட்டு யானைகள் தமது கிராமத்துக்குள் அடிக்கடி உட்புகுவதால் தாம் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கும் பிரதேசமக்கள்,  இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, முன்னம்போடி வெட்டை, சிராஜ் நகர் கிராமங்களுக்குள் யானைகள் உள்ளே வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .