2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் பலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், இன்று (26) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில்,கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில், கிண்ணியா மதினா நகரைச் சேர்ந்த புர்கான்- றிஷாட் (வயது - 09) என்னும் சிறுவனே உயிரிழந்துள்ளார்ரெனப், பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில்,கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .