2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீதி திறந்து வைப்பு

தீஷான் அஹமட்   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலும் அவரின் வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியொதுக்கீட்டிலுமாக மொத்தமாக 40 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூதூர் தபால் நிலைய சந்தியிலிருந்து பெரிய பாலம் வரையிலான 3.5 கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக இன்றுத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. நிஸ்மி , கைத்தொழில் மற்றும்  வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் அப்துல் றஸாக் (நளீமி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .