2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹொட்டலில் மிருகக்காட்சிசாலை நடத்தியவருக்கு அபராதம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - அஹங்கமயிலுள்ள ஹொட்டலில் அருகி வரும் வனவிலங்குகள் சிலவற்றைச் சிறைப்படுத்திய குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்ட ஹொட்டல் உரிமையாளருக்கு 1 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு காலி நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, கொழும்பு வனவிலங்குப் பாதுகாப்பு காரியாலய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, மர அணில், மர அணில் குஞ்சுகள், பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டு, கடலாமைகள் நான்கு என்பன கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .