2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார்.

அற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாப்பா, எஸ்.பி.திசாநாயக்க, விஜித் விஜிதமுனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருக்கு எதிராக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் குறித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .