2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தனியாகப் பயணிப்பதால் வேகமாகச் செல்லலாம்’

Editorial   / 2019 ஜூன் 23 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனமொன்றில் மற்றுமொரு நபரை அழைத்துச் செல்லும் போது, வேகமாகச் செல்ல ​வேண்டாம். அங்கே திருப்பு, இங்கே திருப்பாதே என்பார்கள். ஆனால் இப்போது தனியாக  பயணிப்பதால், எம்மால் வேகமாகப் பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் ​போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிராமங்கள், பிரதேசங்களின் அபிவிருத்தி என்ன என்பதை தற்போதைய அரசாங்கத்திடமிருந்து தெரிந்துக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துட்டகைமுனு மன்னனின் காலத்தைப் போல் அல்ல. இப்போது தான்  அபிவிருத்தி என்றால் என்னவென்பதை பலரும் காண்கின்றனர். நாம் எல்லா இடங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுக்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .