2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்றில் புதிய பிரதமரை நியமிக்கக்கோரும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து இது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

இதன்பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது." எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .