2024 மே 02, வியாழக்கிழமை

பூஜித, ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்ற விசாரணைப் பிரிவினரால், கைதுசெய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடு​முறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி வரை குறித்த இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஹேமசிறி பெர்ணான்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் குற்ற விசாரணைப் பிரிவினரால், கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .