2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

42 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம்

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பார் வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம், ஆலயத்தின் பங்குத்தந்தை ரொசான் அடிகளாரின் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (16) மாலை திறந்து வைக்கப்பட்டது.

புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குமக்கள் இளைஞர்களின் முயற்சியால் மின்குமிழ்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயிரமான கிறிஸ்மஸ் மரமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

ரம்மியமான சூழலில் அழகானமுறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தைக் காண்பதற்கு மக்கள் பெருமளவில் வந்தவண்ணமுள்ளனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .