2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முல்லைத்தீவில் கெடுபிடி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவைத் தொடர்ந்து, குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதியில் இராணுத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .