2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களாக, டினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி என, 3 வகையான போட்டிகளினதும் தலைவராக, மத்தியூஸ் விளங்கிய போதிலும், தற்போது 2 பேருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, டெஸ்ட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ள அதேநேரத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றின் தலைவராக, உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பந்தப்பட்ட செய்தி:
பதவி விலகினார் மத்தியூஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .