2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான 2, 3ஆவது டெஸ்ட்களில் சந்திமால் இல்லை

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான அடுத்த இரண்டு டெஸ்ட்களிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் விலகியுள்ளார். முதலாவது டெஸ்டின் முதலாவது நாளில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாமல் போயுள்ள நிலையிலேயே குறித்த இரண்டு டெஸ்ட்களிலிருந்து சந்திமால் விலகியுள்ளார்.

இந்நிலையில், சந்திமாலுக்கு பதிலாக குழாமில் பந்துவீசக்கூடிய இளம் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

இதேவேளை சந்திமால் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கெதிரான அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் இலங்கையணிக்கு சுரங்க லக்மால் தலைமை தாங்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .