2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் செல்சி

Shanmugan Murugavel   / 2021 மே 06 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதி பெற்றுள்ளது.

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றுள்ளது.

முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 1-1 என சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றிருந்தது.

செல்சி சார்பாக, திமோ வேர்னர், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .