2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலக்கு வைக்கப்பட்டார் கிறேமி கிறீமர்

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக கடந்த மாதம் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, மோசடிக்கான அணுகலொன்றின் இலக்காக, சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேமி கிறீமர் இருந்துள்ளார்.

இந்நிலையில், அணுகலை கிறேமி கிறீமர் முறையிட்டதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணையொன்று இடம்பெறுகிறது. இச்சந்தர்ப்பத்தில், இவ்விசாரணைக்கு சிம்பாப்வே கிரிக்கெட் சபை ஒத்துழைக்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர், மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அணி வீரரொருவர் அணுகப்பட்டதாகவும் அவர் அவ்வாறு செயற்படவில்லையென்றும் சிம்பாப்வே வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .