2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிம்பாப்வேயை மீண்டும் வென்றது பாகிஸ்தான்

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், புலவாயவோவில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 25.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில், பாஹீம் அஷ்ரம் 5, ஜுனைட் கான் 2, யசீர் ஷா, உஸ்மான் கான், ஷடாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 68 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் ஆட்டமிழக்காமல் 43 (24) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பிளஸிங் முஸர்பனி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக பாஹீம் அஷ்ரப் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .