2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாப்போலியை வென்று இறுதிப் போட்டியில் அத்லாண்டா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு அத்லாண்டா தகுதிபெற்றுள்ளது.

நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், அத்லாண்டாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற அவ்வணி, 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

அத்லாண்டா சார்பாக, மட்டியோ பெஸ்ஸினா இரண்டு கோல்களையும், டுவான் ஸபட்டா ஒரு கோலையும் பெற்றனர். நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹிர்விங்க் லொஸானோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .