2024 மே 11, சனிக்கிழமை

பார்சிலோனா, றியல் மட்ரிட் வெற்றி

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்லின் லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில், பார்சிலோனா, றியல் மட்ரிட் அணிகள் வெற்றிபெற்றன.

றியல் பெட்டிஸ் அணிக்கெதிரான போட்டியில், பார்சிலோனா அணி விளையாடியது.

இப்போட்டியின் முதற்பாதியில், போட்டியின் 36ஆவது நிமிடத்தில், பார்சிலோனாவின் ஜெராட் டௌலோபெவின் பந்துப் பரிமாற்றத்தை, றியல் பெட்டிஸ் அணியின் அலின் டொஸ்கோ, தனது அணியின் கோல் கம்பத்துக்குள்ளேயே தட்டிவிட்டார். இதன்மூலம், பார்சிலோனா அணி, 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.

3 நிமிடங்களின் பின்னர், சேர்ஜி றொபேர்ட்டோ, இன்னொரு கோலைப் பெற்றுக் கொடுக்க, 2-0 என்ற கோல் கணக்கில், அவ்வணி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், 2-0 என்ற கோல் கணக்கில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றது.

பார்சிலோனாவில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், பார்சிலோனா அணி பங்குபற்றும் முதலாவது போட்டி இதுவென்பதால், உணர்ச்சிகள் அதிகம் வெளியிடப்பட்ட போட்டியாக அமைந்திருந்தது. அத்தோடு, போட்டிக்கு முன்னதாக, ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

மற்றைய போட்டியில், றியல் மட்ரிட் அணியும் டெபோர்ட்டிவோ லா கொருனா அணியும் மோதின.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில், றியல் மட்ரிட்டின் கரித் பேல், முதலாவது கோலைப் பெற்று முன்னிலை வழங்கினார். பின்னர் 27ஆவது நிமிடத்தில், கஸெமிரோ, இன்னொரு கோலைப் பெற்றார்.

2ஆவது பாதியில், போட்டியின் 62ஆவது நிமிடத்தில், றியல் மட்ரிட் அணியின் டொனி குரூஸ், தனது அணியின் 3ஆவது கோலைப் பெற்றார். இறுதியில், 3-0 என்ற கோல் கணக்கில், றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .