2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட் – பேர்ண்லி போட்டி சமநிலை

Editorial   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், செல்சி, லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வென்றன.

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் மூன்றாவது நிமிடத்திலேயே ஆஷ்லி பார்ன்ஸ் பெற்ற கோலின் மூலம் பேர்ண்லி முன்னிலை பெற்றது.  இதன்பின்னர் போட்டியின் 36ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்தில் கிடைத்த பிறீ கிக்கை ஸ்டீவன் டிபோர் கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் பேர்ண்லி முன்னிலை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஜெஸி லிங்கார்ட் போட்டியின் 53ஆவது நிமிடத்திலும் போட்டியின் இறுதி நிமிடத்திலும் பெற்ற கோல் காரணமாக, 2-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

செல்சி, 2-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனை வென்றது. செல்சி சார்பாக அல்வரோ மொராட்டா, மார்க்கோஸ் அலோன்ஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

லிவர்பூல், 5-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ சிற்றியை வென்றது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ இரண்டு கோல்களைப் பெற்றதோடு, பிலிப்பி கூட்டின்யோ, ட்ரெண்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட், அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 5-2 என்ற கோல் கணக்கில் செளதாம்டனை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன் மூன்று கோல்களையும் டெலே அல்லி, சொன் ஹெயுங் மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .